செத்தவரை சொக்கநாதர் கோவிலில் கயிலாய சொர்க்கவாசல் திறப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22பிப் 2020 12:02
செஞ்சி: செத்தவரை சொக்கநாதர் கோயிலில் சிவராத்திரி முன்னிட்டு கபிலாய சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா செத்தவரை நல்லன்பிள்ளை பெற்றள் கிராமத்தில் உள்ள மீனாட்சி உடனாகிய சொக்கநாதர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு கயிலாய சொர்க்கவாசல் திறப்பு விழா நடந்தது.
இதை முன்னிட்டு சொக்கநாதர், மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு உற்சவர் மீனாட்சி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் கைலாச சொர்க்க வாசல் வழியாக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி தந்தனர். அப்போது சிவஜோதி மோன சித்தர் தலைமையில் சிறப்பு பூஜையும், மகாதீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து சாமி கோவில் உலாவும், இரவு 8 மணிக்கு முதல் கால அபிஷேக ஆராதனையும், 11 மணிக்கு இரண்டாம் கால அபிஷேக ஆரதனையும், 2 மணிக்கு மூன்றாம் கால அபிஷேக ஆரானையும், காலை 4 மணிக்கு நான்காம் கால அபிஷேக ஆராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.