பதிவு செய்த நாள்
24
பிப்
2020
10:02
குளித்தலை: தோகைமலை, மூங்கிலணை காமாட்சி அம்மன் கோவிலில், 40ம் ஆண்டு மாசி பெருவிழா நடந்தது. குளித்தலை அடுத்த, தோகைமலை கடைவீதியில் அமைந்துள்ள மூங்கிலணை காமாட்சி அம்மன், பத்ரகாளி அம்மன், பதினெட்டாம்படி கருப்பு கோவில், 40ம் ஆண்டு மாசி பெருவிழா கடந்த, 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. மஹா சிவராத்திரியன்று, மூங்கிலணை காமாட்சி அம்மனுக்கு இரவு முழுவதும் விசேஷ பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம், தோகைமலை யூனியன் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலுக்கு பால்குடம், பால்காவடி, அக்னி சட்டி, அலகு குத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன், தோகைமலையின் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை சென்றடைந்தனர். தொடர்ந்து குண்டம் இறங்கும் விழா நடந்தது. பிறகு அம்மனுக்கு பால், பஞ்சாமிர்தம், திருநீறு, தேன் போன்ற திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது. நேற்று மதியம், பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் வேண்டுதல் நிறைவேற்றும் வகையில் கிடாவெட்டி, குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடந்தது.