பதிவு செய்த நாள்
24
பிப்
2020
10:02
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., மேட்டுமருதூர் கிராமத்தில் உள்ள, அங்காளபரமேஸ்வரி கோவிலில் மஹா சிவாத்திரியையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு, மயானத்தில் எறிகாவல் பூஜை நடந்தது. கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடந்தது. இரவு, 8:00 மணியளவில் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியான, இன்று காலை கோவில் முன் அலங்கரிக்கப்பட்ட, 25 அடி உயரத்தில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சேலம், திருச்சி, கோவை, மதுரை மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து கோவில் குடிப்பாட்டுக்காரர்கள் வருகின்றனர். இரவு, 8:00 மணியளவில் ராணி மங்கம்மாள் சாலையில், கோட்டை கட்டுதல், கலைத்தல் நிகழ்ச்சியும், தொடர்ந்து முக்கிய வீதிகளில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.