மயிலாடுதுறை: செம்பனார்கோயில் அருகே முடிதிருச்சம்பள்ளியில் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
நாகை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம், மகா சிவராத்திரிக்கு மறுநாள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மயானக் கொள்ளை திருவிழா நேற்று மாலை நடைபெற் றது. விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. கோயிலில் திரண்ட ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடனாக மாவிள க்கிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மாலை அணிவித்து, அர் ச்சனை செய்து வழிபட்டனர். அம்பாள் மயானத்தை வந்தடைந்ததும் தீபாராதனை நடைபெற்றது. அங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய கிழங்குகள் மற்றும் நவதானியங்கள் வை க்கப்பட்டிருந்தன. அவற்றை பேச்சாயி வேடமனிந்த பக்தர்கள் கொள்ளை விடும் நிகழச்சி நடைபெற்றது. இந்த கிழங்கை பக்தர்கள் உண்பதால் குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக உள்ள நோய்கள் தீரும் என்பது ஐதீகம். அதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு கிழங்கை வாங்கி உண்டு வழிபாடு நடத்தினர்.