Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: ... பெரியபட்டினத்தில் பாரிவேட்டை விழா பெரியபட்டினத்தில் பாரிவேட்டை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக் கொள்ளை திருவிழா
எழுத்தின் அளவு:
அங்காள பரமேஸ்வரி கோயில் மயானக் கொள்ளை திருவிழா

பதிவு செய்த நாள்

24 பிப்
2020
11:02

மயிலாடுதுறை:  செம்பனார்கோயில் அருகே முடிதிருச்சம்பள்ளியில் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக் கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

நாகை மாவட்டம் செம்பனார்கோயில் அருகே முடிதிருச்சம்பள்ளி கிராமத்தில் புகழ்பெற்ற அங்காள பரமேஸ்வரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம், மகா சிவராத்திரிக்கு மறுநாள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்வாண்டு மயானக் கொள்ளை திருவிழா நேற்று மாலை நடைபெற் றது. விழாவை முன்னிட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது. கோயிலில் திரண்ட ஏராளமான பெண்கள் நேர்த்திக்கடனாக மாவிள க்கிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பக்தர்கள் மாலை அணிவித்து, அர் ச்சனை செய்து வழிபட்டனர். அம்பாள் மயானத்தை வந்தடைந்ததும் தீபாராதனை நடைபெற்றது. அங்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய கிழங்குகள் மற்றும் நவதானியங்கள் வை க்கப்பட்டிருந்தன. அவற்றை பேச்சாயி வேடமனிந்த பக்தர்கள் கொள்ளை விடும் நிகழச்சி நடைபெற்றது. இந்த கிழங்கை பக்தர்கள் உண்பதால் குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன்,  நீண்ட நாட்களாக உள்ள நோய்கள் தீரும் என்பது ஐதீகம். அதனால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு கிழங்கை வாங்கி உண்டு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி திருக்கோவில் நடந்த ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் இன்று புரட்டாசி பிரமோற்ஸவ விழா ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
சென்னை; மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதியில் கோவில் புரட்டாசி  10 நாள் திரு விழா - கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்பதி; கொடி இறக்கத்துடன்  ஸ்ரீவாரி சாளக்கட்ட பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.திருப்பதி ஏழுமலையான் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar