உத்தமபாளையம் : உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசிமக தேரோட்டம் அமைதியாக நடைபெறுவதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. பிரசித்தி பெற்ற இக்கோயில் மாசிமக தேரோட்டம் மார்ச் 8 ல் நடைபெறுகிறது. இது அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்குரிய ஆலோசனை கூட்டம் ,டி.எஸ்.பி., சின்னகண்ணு தலைமையில் நடைபெற்றது.ஜமாத் தலைவர் எம்.தர்வேஷ்முகையதீன், பி.டி.ஆர்.விஜயராஜன் உள்ளிட்ட பல சமுதாயங்களை சேர்ந்த தலைவர்கள், மண்டகப்படிதாரர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கடந்தாண்டு சென்ற பாதையில் மாற்றமில்லாமல் தேரோட்டம் நடைபெறவும், மது அருந்திவிட்டு பங்கேற்பது, பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட விஷயங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறப்பட்டது.தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் கேமரா மூலம் கண்காணிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. தேரோட்டம் அமைதியாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் எனவலியுறுத்தப்பட்டது. இன்ஸ்பெக்டர் முருகன் ஏற்பாடுகளை செய்திருந்தார். அறிவிப்பு தேரோட்டம் நடைபெறுவதை ஒட்டி அனைத்து ஜமாத் தலைவர் எம்.தர்வேஷ்முகைதீன் வேண்டுகோளை ஏற்று, நல்லணெண்ண அடிப்படையில், தேரோட்டம் நிகழ்ச்சி துவங்கும் பிப். 26 ம் தேதி முதல் மார்ச் 10 ம் தேதி வரை உத்தமபாளையம் நகரில் பொதுவெளியில் குடியுரிமைதிருத்த சட்ட போராட்டத்தை ஒத்திவைப்பது என்று தீர்மானித்துள்ளதாக இஸ்லாமிய நல கூட்டமைப்பு தலைவர் கலீல்ரக்மான் அறிவித்துள்ளார்.