திருப்பூர்: ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், கோச்செங்கட் சோழன் நாயனார் குருபூஜை நேற்று நடந்தது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார்கள் சன்னதி உள்ளது. அர்த்தஜாம பூஜை அடியார் திருக்கூட்டத்தினர் சார்பில், நாயன்மார்கள் குருபூஜை விழா தொடர்ந்து நடந்து வருகிறது. மாசி சதயமான நேற்று, கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை விழா நடந்தது.கோச்செங்கட்சோழ நாயனாருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரபூஜை நடந்தது. சிவனடியார்கள், திருத்தொண்டர்புராணம், சிவபுராணம், திருமுறை பாடல்களை பாராயணம் செய்து வழிபட்டனர்.