திருப்பரங்குன்றம்: மதுரை விளாச்சேரி பூமி நிலா சமேத வெங்கடேசப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. இதையொட்டி யாக பூஜைகள் முடிந்து மூலவர்கள், உற்ஸவர்களுக்கு புனிதநீர் அபிஷேகம், பூஜை, தீபாராதனை நடந்தது. இரவு சுவாமி வீதி உலா வந்தார். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.