பதிவு செய்த நாள்
26
பிப்
2020
10:02
ஈரோடு: ஈரோடு, நக்கீரர் வீதியில் புது எல்லை மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்தி விநாயகர், பாலமுருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன. இந்தாண்டுக்கான திருவிழா நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்படுகிறது. மார்ச், 5ல் இரவு, 8:00 மணிக்கு மலர் பல்லக்கில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது. 6ல் காலை, பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம், பால் குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலம் வருதலும், தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்படுகிறது. 7ல் இரவு அம்மனுக்கு காய்கனி அலங்காரம் செய்யப்பட்டு, 8ல் இரவு, 9:00 மணிக்கு வாய்க்காலில் கும்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 9ல் இரவு மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.