பாலக்கோடு: பாலக்கோடு அடுத்த, பனங்காடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், சிவராத்திரி மயானசூறை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு மேல், அம்மன் பூத வாகனத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று காலை, 11:30 மணிக்கு மேல், அம்மன் மயானம் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சக்தி கரகம், தீச்சட்டி எடுத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் அங்காள பரமேஸ்வரி இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.