Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீரக்குடி முருகைய்யனார் கோயில் ... திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் தங்க புதையல் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மதுரை வீரன் கோவில் உண்டியல் உடைப்பு
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை மதுரை வீரன் கோவில் உண்டியல் உடைப்பு

பதிவு செய்த நாள்

27 பிப்
2020
12:02

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரைவீரன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து வயல்வெளியில் வீசிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகம் நல்லடை கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் சமேத மதுரை வீரன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் சப்தகன்னியர் முத்தால் ராவுத்தர் மற்றும் முனீஸ்வரர் சுவாமியும் எழுந்தருளியுள்ளனர் இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள மதுரை வீரனை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் இந்த கோவிலின் பூஜைகளை பூசாரி முனுசாமி 85 என்பவர் நடத்தி வருகிறார் இந்த கோவிலின்  கும்பாபிஷேகம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது நேற்று முன்தினம் கோவிலில் கிடா வெட்டு நடைபெற்றுள்ளது இதில் 600க்கும் மேற்பட்ட மருளாளிகள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை வழிபட்டு நேர்த்திக் கடன்கள் மற்றும் காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர்  இந்நிலையில் இன்று காலை விவசாய பணிக்காக வயலுக்குச் சென்ற விவசாயி பக்கிரிசாமி என்பவர் அருகிலுள்ள தங்கராசு என்பவரது  வயலில் கோவில் உண்டியல் கிடந்ததை கண்டு கிராம முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்  இதையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்ததில் மர்ம நபர்கள் மதுரைவீரன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை எடுத்துக்கொண்டு வயல் வெளியில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar