மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரைவீரன் கோவில் உண்டியலை மர்ம நபர்கள் உடைத்து வயல்வெளியில் வீசிச் சென்றது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகம் நல்லடை கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பொம்மியம்மாள் வெள்ளையம்மாள் சமேத மதுரை வீரன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் சப்தகன்னியர் முத்தால் ராவுத்தர் மற்றும் முனீஸ்வரர் சுவாமியும் எழுந்தருளியுள்ளனர் இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள மதுரை வீரனை உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஏராளமானோர் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் இந்த கோவிலின் பூஜைகளை பூசாரி முனுசாமி 85 என்பவர் நடத்தி வருகிறார் இந்த கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடைபெற்றது நேற்று முன்தினம் கோவிலில் கிடா வெட்டு நடைபெற்றுள்ளது இதில் 600க்கும் மேற்பட்ட மருளாளிகள் கலந்துகொண்டு சுவாமி அம்பாளை வழிபட்டு நேர்த்திக் கடன்கள் மற்றும் காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர் இந்நிலையில் இன்று காலை விவசாய பணிக்காக வயலுக்குச் சென்ற விவசாயி பக்கிரிசாமி என்பவர் அருகிலுள்ள தங்கராசு என்பவரது வயலில் கோவில் உண்டியல் கிடந்ததை கண்டு கிராம முக்கியஸ்தர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார் இதையடுத்து கிராம மக்கள் திரண்டு வந்து பார்த்ததில் மர்ம நபர்கள் மதுரைவீரன் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் காணிக்கை பொருட்களை எடுத்துக்கொண்டு வயல் வெளியில் வீசி சென்றிருப்பது தெரியவந்தது இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.