பழநி :வால்பாறையில் இருந்து பழநிக்கு பறவைக்காவடி எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தைப்பூசத் திருவிழா நிறைவு பெற்று உள்ள நிலையில் கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து நேற்று பழநிக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள் பழநி சண்முக நதியில் புனித நீராடினர்.உடல் முழுவதும் அலகு குத்தி, பறவை போல அந்தரத்தில் தொங்கியபடி பிரம்மாண்டமான பறவை காவடி எடுத்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட ராட்சத கிரேனில் தொங்கியபடி வந்த பக்தர்கள் கிரிவலம் வந்து பாதவிநாயகர் கோவிலில் நிறைவு செய்தனர். ஏராளமான ஆண்கள், பெண்கள் அலகு குத்தியும், தீர்த்தக்காவடிகள் எடுத்தும் முருகனை தரிசனம் செய்தனர்.