Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் பறவைக்காவடியுடன் வந்த ... முருகன் கோவில் குளத்தை சுற்றி மின்விளக்கு அமைக்க எதிா்ப்பு முருகன் கோவில் குளத்தை சுற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு
எழுத்தின் அளவு:
கோயில் கதவில் தலைவர்கள் படம் அகற்றுவது குறித்து அமைதி பேச்சு

பதிவு செய்த நாள்

28 பிப்
2020
10:02

மொடக்குறிச்சி தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ள, கோயில் கதவை அகற்றும் விவகாரம் தொடர்பாக, ஆர்.டி.ஓ., அமைதி பேச்சு நடத்தினார்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, நஞ்சைகாளமங்களம், மன்னதாம்பாளையத்தில், பிரசித்தி பெற்ற குலவிளக்கு அம்மன் கோயில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.கோயில் முகப்பில், மர வேலைப்பாடுகள் கொண்ட கதவில், ஈ.வே.ரா., அன்னை தெரசா, அண்ணாதுரை, முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் என, 28 தலைவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மொடக்குறிச்சி ஒன்றிய தெற்கு மாவட்ட, பா.ஜ., தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளித்தனர்.அதில், ஹிந்து சமய ஆகம விதிகளுக்கு முரணாக, கோயில் கதவில் உள்ள தலைவர்களின் படங்களை அகற்ற வேண்டும் என, தெரிவித்திருந்தனர்.இது குறித்த அமைதி பேச்சு, குலவிளக்கம்மன் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. ஈரோடு, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணியினர், பா.ஜ.,வினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.ஆர்.டி.ஓ., முருகேசன் கூறுகையில், மக்களின் கோரிக்கையை ஏற்கிறேன். மனுவாக எழுதி கொடுத்தால், கலெக்டர், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் காண்பித்து, உரிய தீர்வை ஏற்படுத்துவோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று நடைபெற்ற ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி திருமஞ்சன திருவிழாவினையொட்டி நடராஜர், ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.ஆதியும் ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது. இன்று காலை 4:00 ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar