நாகர்கோவில் :பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் திருவிழா மார்ச்1ல் துவங்குகிறது.
சபரிமலைக்கு இருமுடி கட்டி செல்வது போல் இக்கோயிலுக்கு பெண்கள் இருமுடி கட்டுடன் வந்து கடலில் குளித்து அம்மனை வழிபடுகின்றனர்.இக்கோயில் மாசி கொடை விழா மார்ச்1ம் தேதி காலை 7:30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.6ம் தேதி இரவு 12:00 மணிக்கு வலியபடுக்கை நடக்கிறது. 10ம் தேதி இரவு 12:00 மணிக்கு ஒடுக்குபூஜை நடக்கிறது. ஆற்றாகால் பொங்கல் விழா கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் மாசி பொங்கல்விழா மார்ச் 1ல் குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. மதுரையை எரித்த கண்ணகி கொடுங்கல்லுார் செல்லும் வழியில் திருவனந்தபுரம் அருகே கிள்ளியாற்றின் கரையில் தங்கியதாகவும், அங்கு கட்டப்பட்ட கோயில் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலாகவும் உள்ளது. இங்கு மாசி மாத பொங்கல் விழா மார்ச்1 காலை 9:30 மணிக்கு அம்மனை காப்பு கட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. மார்ச்9ம் தேதி காலை 10:20 மணிக்கு லட்சக்கணக்கான பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது.