பதிவு செய்த நாள்
29
பிப்
2020
11:02
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின், பிரம்மோற்சவ பெருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்கியது.
திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில், சிறப்பு வழிபாடு நடைபெறும். அந்த வகையில், இந்தாண்டு பிரம்மோற்சவ பெருவிழா, நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச், 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக, நேற்று முன்தினம், செம்பாக்கத்தில் தயாரிக்கப்பட்ட, பிரத்யேக கொடி கயிறை, கோவில் சிவாச்சாரியார்கள் முன்னிலையில், கோவிலில் ஏற்றப்பட்டது. காலை 7:00 மணியளவில், கோவில் வட்ட மண்டபத்தில், உற்சவர் கந்தசுவாமி பெருமான் சிறப்பு அலங்காரத்தில், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கொடி மரம், கொடிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தன. தொடர்ந்து, பக்தர்களின், ‘கந்தா... சரவணா... அரோகரா....’ கோஷத்துடன், காலை, 7:30 மணிக்கு, உற்சவ கொடி ஏற்றப்பட்டது.