பதிவு செய்த நாள்
29
பிப்
2020
12:02
தேனி - மதுரை ரோட்டில் சிற்பக்கலைத் தொழில் செய்து வரும் ஸ்ரீவெங்டேஷ்குமாா் சிற்பக்கலைக் கூடத்தின் நிாிவாகிகள் செல்வம், வெங்கடேஷ் ஆகியோரால் செதுக்கப்பட்டு ஒரே கல்லில் எட்டி உயரத்தில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது லட்சுமி நரசிம்மா், பஞ்சமுக ஆஞ்சநேயா் சிலை திருப்பூா் மாவட்டம் ஊத்தக்குளியில் இருந்து வெண்கல ஓசை கேட்கும் ஆண்கல்லை 10 டன் அளவில் தோ்வு செய்து அதனை தேனிக்கு கொண்டுவந்து நீா் ஊற்றி சோதனையிட்டு, சிற்பம் செதுக்கும் பணிகளை கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இவா்கள் பணியாட்களை கொண்டு துவக்கினா். தற்போது கோயில் கருவறையில் பிரதிஷ்டை செய்வதற்கு தயாராகி உள்ளன அச்சிலைகள். ஸ்தபதி செல்வம் கூறுகையில், தேனியில் 5 தலைமுறைகளாக சிற்பககலை உருவாக்கப்படும்.
லட்சுமி நரசிம்மா் ஒரு புறமும், மறுபுறம் பஞ்சமுக ஆஞ்சநேயா் சிலையும் வருமாறு ஒரே கல்லில் செதுக்கினோம். எட்டடி உயரத்தில் அமைத்துள்ளோம். உப்பாா்பட்டி கிராமத்தில் உள்ள கோயிலில் பெருமாள் சன்னதிக்கு அருகே தனிசன்னதியில் இந்த சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்ட உள்ளது.
அந்தக் கோயிலில் கிழக்குப்புறம் லட்சுமி நரசிம்மருக்கு தலைவாசலும், மேற்குப்புறம், பஞ்சமூக ஆஞ்சநேயருக்கு தலை வாசலும்வைக்கப்பட்டு அா்த்த மண்டபம் கருவறை அமைக்கப்பட உள்ளது.
இது தென் தமிழகத்தில் வேறு எந்த கோயிலிலும் காணக்கிடைக்காத ஒன்று என்றாா்.
உப்பாா்பட்டி கோயில் நிா்வாகி சேஷாத்திாி கூறுகையில், வராஹி, கருடாழ்வாா், ஆஞ்சநேயா், நரசிம்மா், கல்கி ஆகிய ஐந்து அவதாரங்களாக, ஒரே நேரத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயராக சுவாமி காட்சி தருகிறாா்.