பதிவு செய்த நாள்
29
பிப்
2020
12:02
திருத்தணி : முருகன் கோவிலில் நடந்த தைப்பூசம், தைக்கிருத்திகை உள்பட, 28 நாட்களில் பக்தர்கள், 1.17 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர்.
திருத்தணி முருகன் மலைக்கோவிலில், கடந்த, 3ம் தேதி தைக்கிருத்திகையும், 8ம் தேதி தைப்பூசம் ஆகிய விழாக்கள் நடந்தன.இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் மீதமுள்ள நாட்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்தனர். பின், பக்தர்கள் நேர்த்திக் கடனாக ரொக்கம், தங்கம், வெள்ளி ஆகியவற்றை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினர்.இதையடுத்து, நேற்று முன்தினம், உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஊழியர்கள் காணிக்கையை எண்ணினர். இதில், 1.17 கோடி ரூபாய் ரொக்கம், 910 கிராம் தங்க நகை, 8,340 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.