காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவம், நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. காஞ்சிபுரம் நகரின் புகழ்பெற்ற கோவிலான, காமாட்சியம்மன் கோவிலில், இந்தாண்டுக்கான பிரம்மோற்சவம், நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது.முன்னதாக, நேற்று முன்தினம் சண்டி ஹோமம், விநாயகர் உற்சவம் போன்றவை நடந்தன.நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, கோவில் நுழைவு வாயிலில் உள்ள கொடிமரத்தில், காமாட்சியம்மன் படம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. கொடிமரம் முழுவதும்மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.