காலை, 6:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இரவு பஜனை இடம்பெற்றது. முக்கிய திருவிழா நாளான அதிகாலை முதல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை, 10: 00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக, திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, பஜனை, ஆன்மீக சொற்பொழிவு, ஆடல் பாடல் இடம்பெற்றது. தொடர்ந்து, முடி காணிக்கை நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில், ஒன்னதலை சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலை, 4:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கிராம மக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.