பதிவு செய்த நாள்
02
மார்
2020
10:03
திருப்போரூர்:திருப்போரூரில் மாசி கிருத்திகை விழாவில் காவடிகளுடன் நேற்று பக்தர்கள் குவிந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும், மாசி கிருத்திகை விழா விமர்சையாக நடைபெறும்.இந்தாண்டு இவ்விழா நேற்று நடந்தது. அதிகாலை, 3:00 மணிக்கு, கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்கள் மொட்டை அடித்து, சரவண பொய்கையில் நீராடி, கந்தனை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.கிருத்திகையை ஒட்டி, மாடவீதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.காவடி மண்டபத்திலிருந்து, பல விதமான காவடிகள் புறப்பாடு மாட வீதிகளில் சென்றன. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தியும் வழிபட்டனர்.ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில், கிருத்திகை வந்ததால், செங்கை, காஞ்சி, சென்னை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிருந்தும், பக்தர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.காவல் துறையுடன் இணைந்து, காவல் துறை நண்பர்கள் குழுவினர் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.