திருவாடானை:திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, ஆந்தகுடி சுப்பிரமணியர் கோயிலில் சஷ்டியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. வள்ளி, தெய்வானையுடன்முருகன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கந்தசஷ்டி கவசம் போன்ற பக்தி பாடல்களைபாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.