பதிவு செய்த நாள்
03
மார்
2020
12:03
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவிலில், சித்திரை திருவிழாவுக்கான, பந்தல்கால் முகூர்த்தம் நேற்று நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற, தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும், சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழா, ஏப்., 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மே, 5ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மே, 2ம் தேதி நடைபெறுகிறது.விழாவுக்கான, பந்தல்கால் நடும் விழா, கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவில், செயல் அலுவலர்கள், சிவச்சாரியார்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.