மேலுார், ஒன்றிய அலுவலகம் அருகே கிழவி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தையொ்டி மார்ச் 2 யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜைக்குபின் சிவாச்சார்யார்கள் தட்சிணாமூர்த்தி, ராஜா கும்பத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மூவாயிரம் பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது.