Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோஷ்டியூரில் மார்ச் 9ல் ... திருவொற்றியூர் தியாகராஜர் திருக்கல்யாணம் கோலாகலம் திருவொற்றியூர் தியாகராஜர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தர வரதராஜர் கோவில் சீரமைக்க எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 மார்
2020
03:03

வடக்குப்பட்டு: வடக்குப்பட்டு சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் நுழைவாயில் கதவு மற்றும் கோவிலை சீரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதுார் அருகே, ஒரகடம் அடுத்த, வடக்குப்பட்டு கிராமத்தில், சுந்தர வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.பழமையான இந்த கோவில், ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், இந்த கோவில் பராமரிப்பு இன்றி உள்ளது.கோவிலின் நுழைவு வாயிலின் மரக்கதவு சேதமாகி, எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள், நுழைவுவாயிலை அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். மேலும், வாகன மண்டபம் கூரை சேதமாகியுள்ளதால், மழை காலத்தில் தண்ணீர் கசிகிறது. கோபுரத்தின் பல இடங்களில், ஆல மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன. கலசம் சேதமாகி, சாய்ந்த நிலையில் உள்ளது.இது குறித்து, பக்தர்கள் கூறியதாவது: வடக்குப்பட்டு கிராமத்தின் அடையாளமாக இந்த கோவில் உள்ளது. பராமரிப்பும் இன்றி பொலிவிழந்துள்ளது. நுழைவு வாயில் கதவு எந்த நேரத்திலும் முறிந்து விழக்கூடிய நிலையில் உள்ளதால், கோவிலை பூட்டி வைக்க முடியவில்லை. கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்ய, அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar