பதிவு செய்த நாள்
08
மார்
2020
01:03
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், முடி காணிக்கை வருமானம், 26.44 கோடி ரூபாய் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு செல்லும் பக்தர்கள், ஏழுமலையானுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கும் தலைமுடியை, ரகம் வாரியாக தரம் பிரித்து, இணையதள ஏலம் மூலம், தேவஸ்தானம் விற்று வருகிறது.இந்த ஏலம், மாதந்தோறும், திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி தலைமையில் நடந்து வருகிறது.அதன்படி, சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஏலத்தில், 33 ஆயிரத்து, 600 கிலோ தலைமுடி விற்பனையானதில், தேவஸ்தானத்திற்கு, 26.44 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.