நத்தம்:நத்தம் மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு நாளை பூக்குழி இறங்கும் விழா நடக்கிறது.நத்தம் மாரியம்மன் கோயில் திருவிழா பிப்.24 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்து காப்புக்கட்டி 15 நாட்கள் விரதத்தை துவங்கினர். தினமும் அம்மன் வீதியுலா நடக்கிறது. நேற்று ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.இன்று (மார்ச் 9) அம்மனுக்கு மஞ்சள் பாவாடை கொண்டு வருதல், மாலையில் அரண்மனை பொங்கல், மாவிளக்கு, காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (மார்ச் 10) பக்தர்கள் அக்னி சட்டி மற்றும் கரும்புத் தொட்டில் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவர். பகலில் கழுமர ஏற்றம் நடைபெறும். இதைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.