திண்டிவனம்:இரும்பை மாகாளேஸ்வரர் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. புதுச்சேரி அடுத்த இரும்பை கிராமத்தில், பிரசித்தி பெற்ற மதுசுந்தரநாயகி உடனுறை மாகாளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் சனி பிரதோஷ வழிபாடு நடந்தது. மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நந்தி மற்றும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது.