மரக்காணம்:மரக்காணம் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடந்தது. மரக்காணம் பூமிஸ்வரன் கோவில், முன்னுார் ஆடவல்லீஸ்வரர் கோவில், அனுமந்தை ஈஸ்வரன் கோவில் மற்றும் பெருமுக்கல் முத்தியாஜல ஈஸ்வரன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5.00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள சிவ பெருமானுக்கு பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மாலை 6.00 மணிக்கு நந்தி பகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.