பதிவு செய்த நாள்
04
மே
2012
11:05
தென்காசி :தென்காசி பகுதி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி காசிவிசுவநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு எண்ணெய் காப்பு சாத்தப்பட்டது. பின்னர் மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. நந்தி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தென்காசி குலசேகரநாதர் கோயிலில் மாலையில் நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். சிதம்பரேஸ்வரர் கோயில், மேலசங்கரன் கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், இலஞ்சி குமாரர் கோயில், செங்கோட்டை சிவன் கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.