நத்தம் :நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.வளாகத்தில் உள்ள விநாயகருக்கு பால், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், புஷ்பம், மஞ்சள் நீர், விபூதி, திருமஞ்சணம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அருகம்புல், பூமாலை அலங்காரத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு சிறப்பு பூஜை நடந்தது.கைலாசநாதர் கோயில் வளாகத்தில் உள்ள விநாயகருக்கும் அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.