காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில் நடந்த தெப்பல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தெப்பல் உற்சவம் நடந்தது.அதைமுன்னிட்டு, விசஷே திருமஞ்சனம் நடந்தது. இரவு ஸ்ரீதேவி சமேதராக பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளினார். அம்மையார் திருக்குளத்தில், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.