பதிவு செய்த நாள்
13
மார்
2020
01:03
கண்ணியம் மிக்க கடக ராசி அன்பர்களே!
இந்த மாதம் சனி, கேதுவால் நற்பலன்கள் தொடரும். செவ்வாய் மார்ச் 23 வரையும், புதன் ஏப்.1 வரையும், சுக்கிரன் மார்ச் 28க்கு பிறகும் நற்பலன் கொடுப்பார்கள். மேலும் குரு மார்ச் 27ல் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இது சிறப்பான இடம். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற வசதிகள் கிடைக்கும். பணியாளர்களுக்கு உயர்வைத் தருவார். அவரது 5ம் இடத்துப் பார்வை சாதகமாக காணப்படுகிறது. இதனால் பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவியும் கிடைக்கும்.
குடும்பத்தினரின் தேவையறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடை, ஆபரணம் வாங்கலாம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கணவன், மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். அண்டை வீட்டாரின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க நினைப்பவர்கள் மார்ச் 23க்குள் பயன்படுத்திக் கொள்ளவும். மார்ச் 28க்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்களின் வருகை இருக்கும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். அவர்களால் பொன், பொருள் சேரும். சூரியனால் சமூக மதிப்பு எதிர்பார்த்தபடி இருக்காது. ஏப்.1க்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையுடன் விட்டுக் கொடுத்து போகவும். பணிந்தாலும் வெற்றி உங்களுக்கே கிடைக்கும்.
பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி பெறுவர். சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். மார்ச் 23 வரை பெண் காவலர்கள் சிறப்பான பலன் பெறுவர். புதிய பதவியும் தேடி வரும். ஏப்.1க்கு பிறகு வேலையில் நிதானம் தேவை. முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்காமல் செய்யவும். உடல்நிலை சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவும் குறையும். உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் அமோக லாபம் கிடைக்கப் பெறுவர். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும். பங்கு வர்த்தகம் அதிக லாபத்தை தரும்.
* வியாபாரிகள் விரிவாக்க முயற்சியில் ஈடுபடுவர். மார்ச் 28க்கு பிறகு தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது.
* தனியார் துறை பணிபுரிபவர்களுக்கு மாத முற்பகுதியில் புதனாலும், பிற்பகுதியில் குருவாலும் திறமை பளிச்சிடும். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சகஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். விண்ணப்பித்த கோரிக்கைகள் நிறைவேறும்.
* ஐ.டி., துறையினர் தொய்வின்றி பணியில் ஈடுபடுவர். கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வும் கிடைக்கப் பெறுவர்.
* மருத்துவர்களுக்கு திறமை பளிச்சிடும். எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும்.
* வக்கீல்கள் எதிர்பாராத நன்மை கிடைக்கப் பெறுவர். முயற்சியில் வெற்றி காணலாம். பணியிடத்தில் அதிகாரம் கொடிகட்டி பறக்கும்.
* ஆசிரியர்களுக்கு மார்ச் 27க்கு பிறகு செல்வாக்கு அதிகரிக்கும். புதிய பதவி பெற வாய்ப்பு இருக்கிறது.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை மார்ச் 23க்குள் கேட்டு பெற்று கொள்ளவும்.
* அரசியல்வாதிகள் மார்ச் 23 வரை பணப்புழக்கத்தில் இருப்பர். வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
* பொதுநல சேவகர்களுக்கு மறைமுக எதிரிகள் விலகிச் செல்வர். சிலர் தங்களின் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவ முன்வருவர்.
* கலைஞர்களுக்கு சக கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அவப்பெயர், போட்டிகள், எதிரி தொல்லை முதலியன மார்ச் 27க்கு பிறகு மறையும். அதன் பின் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
* விவசாயிகள் பழவகைகள், கீரை வகைகள் மூலம் அதிக வருமானம் காண்பர். புதிய சொத்து வாங்கும் எண்ணம் மார்ச் 23க்குள் கைகூடும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பக்கத்து நிலத்துக்காரர்கள் வகையில் இருந்த தொல்லைகள் மறையும்.
* பள்ளி மாணவர்கள் சிறப்பான வளர்ச்சி காண்பர். தேர்வில் அதிக மதிப்பெண் கிடைக்கப் பெறுவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காண்பர். காலர்ஷிப், கடனுதவி கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழில்அதிபர்கள் சிலர் ஏப்.1க்கு பிறகு தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே புதியவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகவும்.
* வியாபாரிகள் ஏப்.1க்கு பிறகு வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களின் திறமையால் வருமானம் கிடைக்கும். யாரையும் எளிதில் நம்பாமல் முக்கிய பணிகளை நீங்களே செய்வது நல்லது.
* அரசியல்வாதிகள் மார்ச் 23க்கு பிறகு மறைமுக எதிரிகளால் சிரமப்பட நேரிடும். எனவே அவர்களின் மீது ஒரு கண் இருப்பது நல்லது
* பள்ளி ,கல்லூரி மாணவர்கள் ஏப்.1க்கு பிறகு விடாமுயற்சியுடன் படிக்க வேண்டியதிருக்கும். சிலர் தீயநண்பர்களுடன் பழக நேரிடலாம் கவனம்.
நல்ல நாள்: மார்ச் 17,18,19,20,26,27,28,29,30, ஏப்.1,2,3,7,8,13
கவன நாள்: மார்ச் 21,22,23 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்:5,6 நிறம்: பச்சை, கருப்பு
பரிகாரம்:
* வெள்ளியன்று காளியம்மன் வழிபாடு
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* சுவாதியன்று நரசிம்மருக்கு நெய் தீபம்