பதிவு செய்த நாள்
13
மார்
2020
01:03
தெய்வீக மனப்பான்மை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!
ராகுவால் நன்மை இந்த மாதமும் தொடரும். மேலும் மாத முற்பகுதியில் குருவும், சுக்கிரனும் பிற்பகுதியில் செவ்வாயும், புதனும் நற்பலனைக் கொடுப்பர். குரு மார்ச் 27 வரை சாதகமான நிலையில் இருந்து நற்பலன் தருவார். அதன் பிறகு அவர் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இது சுமாரான இடம்தான். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9ம் இடத்துப்பார்வை சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த பிரச்னையையும் முறியடிக்கும் வல்லமை கிடைக்கும். உங்களது ஆற்றல் மேம்படும். மனதில் துணிச்சல் பிறக்கும். பணவரவு அதிகரிக்கும்.
பொன்,பொருள் சேரும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்கள் உறுதுணையாக இருப்பர். குருபகவான் பொருளாதார வளத்தை அதிகரிக்கச் செய்வார். சகோதரிகளால் மேன்மை உண்டாகும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
செவ்வாய், சூரியன், புதன் ஆகிய கிரகங்கள் சாதகமற்ற நிலையில் இருப்பதால் பிரச்னை ஏற்படலாம். மார்ச் 23க்கு பிறகு நிலைமை சீராகும். முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள். அபார ஆற்றல் பிறக்கும். புதிய வீடு, மனை, வாகனம் வாங்க யோகம் சேரும். ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம்.
குடும்பத்தில் புதனால் ஏற்பட்ட குழப்பம், மனைவி வகையில் ஏற்பட்ட பிரிவு, மனக்கவலை முதலியன ஏப்.1க்கு பிறகு மறையும். அதன் பிறகு பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். குடும்பத்தில் குதுாகலம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். பெண்களுக்கு அக்கம்பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். குருவால் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். ஏப்.1க்கு பிறகு பிள்ளைகளால் மகிழ்ச்சியும், பெருமையும் கிடைக்கும். ஆடை, அணிகலன்கள் வாங்கலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனைக் காண்பர். வேலையில் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் வருமானம் காண்பர். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மார்ச் 23க்கு பிறகு பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள்.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்களை பொறுத்தவரை, பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் முன்னேற்றம் பெறும். மார்ச் 23க்கு பிறகு திடீர் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு. பகைவர் சதி எடுபடாது. அவர்கள் சரணடையும் நிலை ஏற்படும்.
* வியாபாரிகள் மாத முற்பகுதியில் அதிக லாபம் காண்பர். தங்கம், வெள்ளி, வைர வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளரின் ஆதரவுடன் முன்னேறுவர்.
* தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பாராத வகையில் ஆதாயம் கிடைக்கும். பகைவரை எதிர்த்து வெற்றி கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.
* தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இல்லை. இருப்பினும் ஏப்.1 வரை பணிபளுவை சுமக்க வேண்டியதிருக்கும். சிரத்தை எடுத்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும்
* ஐ.டி., துறையினர் சிறப்பான பலனைக் காணலாம். விண்ணப்பித்த கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
* மருத்துவர்களுக்கு வேலைப்பளு குறையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலையில் திருப்தி ஏற்படும். மற்றவர் உதவியை நாடாமல் தொழிலில் சாதிக்கலாம்.
* வக்கீல்களுக்கு ஏப்.1 க்கு பிறகு வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சகவக்கீல்கள் மத்தியில் நற்பெயர் ஏற்படம்.
* ஆசிரியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்புண்டு. அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்களுக்கு மார்ச் 23க்கு பிறகு கோரிக்கைகள் நிறைவேறும். பதவி உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பர்.
* அரசியல்வாதிகள் மார்ச் 23க்கு பிறகு சிறப்பான பலனைக் காண்பர். அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் உதவிகரமாக இருப்பர்.
* கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழில்ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வர்.
* விவசாயிகளுக்கு பாசிப்பயறு, உளுந்து, துவரை, கொண்டைக்கடலை, மஞ்சள், தக்காளி, பழ வகைகள் காய்கறி, கீரை வகைகள் மூலம் வருமானம் கிடைக்கும். மார்ச் 23க்கு பிறகு வழக்கு, விவகாரங்களில் முடிவு சாதகமாக அமையும். கைவிட்டு போன பொருள் மீண்டும் கிடைக்கும். பக்கத்து நிலப்பிரச்னை மறையும். ஏப்.1க்கு பிறகு கால்நடை வகையில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும். ஏப்.1க்கு பிறகு புதன் சாதகமாக இருப்பதால் போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* வியாபாரிகள் சக வியாபாரிகளுடன் கருத்துவேறுபாடு கொள்ள நேரிடலாம். அரசு வகையில் பிரச்னை ஏற்படலாம். எனவே கணக்கு வகையில் சற்று கவனம் தேவை.
* அரசு பணியாளர்கள் முக்கிய பொறுப்புகளை தட்டிக் கழிக்க வேண்டாம். சக பணியாளர்களால் வேலைப்பளு அதிகரிக்கும். விடாமுயற்சியின் பேரில் கோரிக்கைகள் நிறைவேறும்.
* அரசியல்வாதிகள் மார்ச் 28க்கு பிறகு அலைச்சலுக்கு ஆளாகலாம். உடல்நலனில் அக்கறை தேவை.
* கலைஞர்களுக்கு மார்ச் 28க்கு பிறகு எதிரி தொல்லை அதிகரிக்கும். மறைமுகப் போட்டி ஏற்படலாம்.
நல்ல நாள்: மார்ச் 14,19,20,21,22,23,29,30,31 ஏப்.1,5,6,9,10
கவன நாள்: மார்ச் 24,25 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 6,8 நிறம்: நீலம், சிவப்பு
பரிகாரம்:
* தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்
* சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம்
* பவுர்ணமியன்று அம்மனுக்கு அர்ச்சனை