பதிவு செய்த நாள்
13
மார்
2020
01:03
தராசு போல செயல்படும் துலாம் ராசி அன்பர்களே!
சூரியன்,சனி,கேது மாதம் முழுவதும் நற்பலன் தருவர். மேலும் செவ்வாய் மார்ச் 23 வரையும், சுக்கிரன் மார்ச் 28 ல் இருந்தும், புதன் ஏப்.1ல் இருந்தும் நற்பலன் கொடுப்பார்கள். தற்போது 3ம் இடத்தில் இருக்கும் குருபகவான் மார்ச் 27ல் அதிசாரம் அடைந்து மகர ராசிக்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் இல்லை.
குடும்பத்தில் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். புதிய வீடு, மனை, வாகனம், சொத்து மார்ச் 23க்குள் வாங்கலாம். சனிபகவான் காரிய அனுகூலம், பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சியை தந்து கொண்டிருக்கிறார். சுக்கிரனால் மார்ச் 28க்கு பிறகு வசதி வாய்ப்பு பெருகும். பெண்கள் ஆதரவுடன் செயல்படுவர். புதனால் ஏப்.1க்கு பிறகு கவலை மறையும். நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன், மனைவி இடையே இணக்கமான சூழ்நிலை இருக்கும்.
பெண்கள் சிறப்பான பலனைக் காணலாம். ஆடை, ஆபரணம் வாங்கலாம். குடும்பத்தோடு புனித தலங்களுக்கு சென்று வருவர். பெண் காவலர்கள் சிலர் உயர் பதவியை அடைய வாய்ப்புண்டு. பூ வியாபாரம் செய்யும் பெண்கள் அதிக வருமானம் காண்பர். மார்ச் 28க்கு பிறகு ஆடம்பர வசதிகள் பெருகும். தோழிகள் ஆதரவுடன் செயல்படுவர். சகோதரர் வழியில் பண உதவி கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். ஏப்.8க்கு பிறகு சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள். சகோதரிகளால் நற்சுகம் ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் வளர்ச்சி காண்பர். கடந்த மாதத்தில் இருந்த வேலைப்பளு குறையும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். ஆரோக்கியம் மேம்படும். மார்ச் 23க்கு பிறகு உடல்நலனில் அக்கறை தேவை. பயணத்தின் போது கவனம் தேவை.
சிறப்பான பலன்கள்
* தொழிலதிபர்கள் அனுபவசாலிகளின் வழிகாட்டுதலால் முன்னேறுவர். தொழிலாளர்களின் ஆதரவு வளர்ச்சிக்கு வழிவகுக்கும். கோயில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில்கள் சிறந்து விளங்கும். மார்ச் 28க்கு பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட தொழில் வளர்ச்சியடையும்.
* வியாபாரிகளுக்கு எதிரிகளால் இருந்த முட்டுக்கட்டைகள் விலகும். மார்ச் 28க்கு பிறகு பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். பங்கு வர்த்தகம் ஆதாயத்தை தரும்.
* அரசு வேலையில் இருப்பவர்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையிருக்காது.
* தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு பணியிடத்தில் மதிப்பு அதிகரிக்கும். ஏப்.1க்கு பிறகு இடமாற்ற பீதி மறையும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவர்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்களின் கோரிக்கைகளை மார்ச்23க்குள் கேட்டு பெறவும்.
* ஐ.டி., துறையினருக்கு மார்ச் 28க்கு பிறகு சகபெண் ஊழியர்கள் ஆதரவுடன் செயல்படுவர். முக்கிய கோரிக்கைகள் அப்போது நிறைவேறும்.
* மருத்துவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஏப்.1க்கு பிறகு பதவி உயர்வு கிடைக்கும். மேலதிகரிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
* வக்கீல்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வேலை விஷயமாக வெளியூர் சென்றவர்கள் வீடு திரும்புவர்.
* ஆசிரியர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பு, மரியாதை உயரும். அரசு வகையில் விருது, பாராட்டு போன்றவை கிடைக்கும்.
* தரகு,கமிஷன் தொழிலில் கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். திடீர் பணவரவுக்கு இடமுண்டு.
* அரசியல்வாதிகள் மாத முற்பகுதியில் எதிர்பார்த்த பதவி கிடைக்கப் பெறுவர்.
* பொதுநல சேவகர்களுக்கு மார்ச் 28க்கு பிறகு அனுகூலமான காற்று வீசத் தொடங்கும். பெண்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு உதவிகரமாக இருப்பர்.
* கலைஞர்களுக்கு பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மார்ச் 28க்கு பிறகு மறையும். அதன் பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர்.
* விவசாயிகள் எதிர்பார்த்த வருமானத்தைக் காண்பர். நெல், கோதுமை, கேழ்வரகு, பழவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்கள் மூலம் மகசூல் அதிகரிக்கும். கறுப்பு நிற தானியம் பயிரிடுவது நல்லது. புதிய சொத்து வாங்க யோகமுண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். ஏப்.1 க்கு பிறகு கால்நடை வளர்ப்பின் மூலம் நல்ல பணப்புழக்கத்தை எதிர்பார்க்கலாம்.
* பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆலோசனையால் நன்மை கிடைக்கும். ஏப்.1க்கு பிறகு கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி காணலாம். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும்.
சுமாரான பலன்கள்
* தொழிலதிபர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
* போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மார்ச் 23க்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து போகவும்.
* அரசியல்வாதிகள் மார்ச் 23க்கு பிறகு எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. சிலர் மனஉளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புண்டு.
நல்ல நாள்: மார்ச் 14,17,18,24,25,26,27,28, ஏப். 2,3,4,5,6,9,10,13
கவன நாள்: மார்ச் 29,30 சந்திராஷ்டமம்
அதிர்ஷ்ட எண்: 5,7 நிறம்: சிவப்பு, கருப்பு
பரிகாரம்:
* ஞாயிறன்று ராகு காலத்தில் பைரவர் பூஜை
* வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி வழிபாடு
* பவுர்ணமியன்று மாரியம்மனுக்கு மாவிளக்கு