Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குடந்தை சக்கரபாணி உற்சவருக்கு தங்க ... மாகாளியம்மன் கோவிலில் பூக்குண்டம் இறங்கிய பக்தர்கள் மாகாளியம்மன் கோவிலில் பூக்குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையத்தில் துப்பாக்கி வீரன் நடுகற்கள்
எழுத்தின் அளவு:
ராஜபாளையத்தில் துப்பாக்கி வீரன் நடுகற்கள்

பதிவு செய்த நாள்

14 மார்
2020
12:03

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே  சேத்துாரில் துப்பாக்கியுடன் உள்ள வீரனின் இரண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  தொல்லியல் ஆய்வாளரும், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி வரலாற்று துறை உதவிப் பேராசிரியருமான  போ. கந்தசாமி தெரிவித்துள்ளார். அவர்  கூறியதாவது: சேத்துார் பகுதியில் கள ஆய்வில் ஈடுபட்டபோது   நடுகல்லில் வீரன் நின்ற நிலையில் தனது இடது கையால் தரையில் ஊன்றியப்படி  நாட்டுத்துப்பாக்கியை பிடித்தப்படியும் வலது கையை கீழே தொங்க விட்ட நிலையிலும், மார்பின் இடைப்பகுதியில் பூணூல் போன்ற கயிற்றில் துப்பாக்கி தோட்டாக்கள் அடங்கிய பையை மாட்டி உள்ளது போன்று காணப்படுகிறது.

வீரனின் தலைக்கொண்டை அலங்காரத்துடனும்  இரண்டு நீண்ட காதணிகள் அணிந்துள்ள நிலையில்  கைத்தண்டை, கைக்காப்பு, காற்சிலம்பு மற்றும் இடை ஆடை போன்றவையுடன் மிக நேர்த்தியாக இக்கல் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இதில்  வீரனின் முகம் சிதைந்த நிலையில் காணப்படுகிறது.  மேட்டுப்பட்டி மாரியம்மன் கோயில் பங்குனி  விழாவின் போது இந்நடுகல்லை மக்கள் காவல் தெய்வமாக வழிபட்டு சிறப்பு பூஜையும் செய்கின்றனர். வழிபாட்டு நிலையில் உள்ள இந்நடுகல் மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சேத்துார் காமராஜர் நகர் அருகே ரோட்டோரத்தில் மற்றொரு நடுகல் மேற்கூறிய நடுகல்லை போன்றே வீரன் நின்றவாறுநாட்டுத்துப்பாக்கியை இடுப்பு  கயிற்றில் கட்டிய நிலையிலும்  இடது கையால் சற்று உயர தூக்கி பிடித்தப்படி  கல்   உள்ளது.  காதணிகள், தலைக் கொண்டை, கைக்காப்பு, கைத்தண்டை, காற்சிலம்பு மற்றும் இடை ஆடையில் குஞ்சம் வைத்தப்படி  செதுக்கப்பட்டுள்ளன. இந்நடுகல்லைகருப்பசாமி  பெயரில் குலதெய்வமாக மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதை சிவகாசி, விருதுநகர், தேனி , போடி பகுதி மக்கள் வழிபடுகின்றனர். இரண்டு நடுகற்களிலும் வீரன் நாட்டு  துப்பாக்கியுடன் காணப்படுவதால் விலங்குகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களை காப்பதற்காகவும், காட்டு விலங்குகளைவேட்டையாடி வீரம் புரிந்த நிகழ்வுகளை இந்நடுகல் சிற்பங்கள் நமக்கு உணர்த்துகிறது.  இவற்றின் உருவ அமைப்பை  கொண்டு கி.பி. 17 ம்நுாற்றாண்டின் பிற்பகுதியை சார்ந்ததாக கருதப்படுகிறது. தமிழ்  சமூகத்தில் வீரனை முன்னிறுத்தி மரியாதை செய்யக்கூடிய பழக்கம் நடுகல் மூலமே வெளிப்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த துப்பாக்கி வீரன் நடுகற்களே சான்றாக அமைகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாசி பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா 11ம் நாளான நேற்று இரவு தெப்ப ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை ஏராளமான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நடந்த தீபந்த சேவையில் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினத்தில் நடந்த மாசிமக விழாவில் 6பெருமாள்கள் தீர்த்தவாரியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar