Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிடாரி அம்மன் கோவிலில் திருக்குட ... மணக்குள விநாயகர் கோவிலுக்குள் வெளிநாட்டினர் நுழைய தடை மணக்குள விநாயகர் கோவிலுக்குள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போலீசார் கட்டிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
போலீசார் கட்டிய மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 மார்
2020
01:03

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை, டவுன் போலீஸ் ஸ்டஷேன் யொட்டி போலீசார் ஒன்றிணைந்து மாரியம்மன் கோயில் கட்டியதோடு இதன் கும்பாபிஷேகத்தில்  அனைத்து மதத்தினரையும்  பங்கேற்க செய்து  மத நல்லிணக்க விழாவாக நடத்தி உள்ளனர். தன்னலம் இல்லாமல் பொது காரியங்களில் ஈடுபடுவதில்  சிறிது   கவனம் தவறினாலும் நம்மை தவறாக நினைத்து விடுவர். இதனாலே  பொது காரியங்களில் ஈடுபடுவதற்கு பலரும் யோசனை செய்வர். அதிலும்  ஒரு கோயில் கட்டுவது என்பது எளிதல்ல பலருடைய உழைப்பு தேவை.இதை ஏற்று செய்வதற்கு நல் உள்ளம் கொண்டவர்கள்  என  பலரும்  கூடி வந்தால் தான் கோயில் கட்டுவது  என்பது சாத்தியம்.

அந்தவகையில்  அருப்புக்கோட்டை டவுண்  இன்ஸ்பெக்டர் பாலமுருகன்  போலீஸ் பணி தவிர  சுற்றுபுற சூழலை சுத்தமாக வைத்து கொள்வது, இயற்கையை பேணி பாதுகாப்பது போன்ற பணிகளில் ஆர்வம் கொண்டவர். தான் பணிபுரியும்  ஸ்டஷேன் அருகே போலீசார்களுக்கு நவீன உடற் பயிற்சி கூடம், நுாலகம், குடியிருப்பு பகுதியில் பூங்கா  அமைத்து கொடுத்துள்ளார்.  இதோடு ஸ்டஷேன் பின்புறம் சிறிய பீடத்துடன் இருந்த சந்தன மாரியம்மன் கோயிலை  புதியதாக  கட்ட முடிவு செய்தார்.  கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துவங்கிய இப்பணி  இடைவிடாது நடந்து இன்று பெரிய கோயிலாக உருவாகி கும்பாபிஷேகமும் நடந்துள்ளது. ஓய்வு நேரங்களில் அதிகாரிகள் முதல் போலீசார் வரை அனைவரும்  ஒன்று சேர்ந்து   கோயிலை கட்டி முடித்துள்ளனர்.இதன் கும்பாபிஷேகம்   நேற்று  நடந்தது. இதற்காக  நவக்கிரகேஹாமம், வரலட்சுமிேஹாமம், வேத பாராயணம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உட்பட  பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில்  மத நல்லிணக்கத்ததை வலியுறுத்தும் வகையில் அனைத்து மதம்  ,சமுதாயத்தினர்   கலந்து கொண்டனர். இஸ்லாமிய  பிரமுகர்கள் பக்தியுடன்  தரிசித்தது மத நல்லிணக்கத்திற்கு சான்றாக இருந்தது. இதோடு அனைத்து சமுதாயத்தினரும் கோயிலுக்கு  சீர்வரிசை  வழங்கினர்.  அன்னதானமும் நடந்தது.  சாத்துார் ராமச்சந்திரன்  எம்.எல்.ஏ., ஆர்.டி.ஒ., செல்லப்பா, டி.எஸ்.பி., வெங்கடஷேன், அனைத்து அரசு துறையினர் மற்றும் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar