பழநி, :பங்குனி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை வழிபாடு நடந்தது.பங்குனி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி மலைக்கோயிலில் காலை ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து பூஜை நடந்தது. கணபதி ஹோமம் செய்யப்பட்டது. சிறப்பு யாகத்தில் வைக்கப்பட்ட கும்ப கலசநீரால் விநாயகருக்கு அபிஷேகம் நடந் தது. பூஜையில் லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவசத்தில் ஆனந்த விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின் மகா தீபாராதனை நடந்தது. பழநி மலைக்கோயில் சண்முகருக்கும் சிறப்பு அபிஷேகம், மலர்களால் அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.