Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » அப்பைய தீட்சிதர்
அப்பைய தீட்சிதர்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 மே
2012
02:05

அப்பைய தீட்சீதருக்கு எல்லா சாஸ்திரங்களும் தெரியும். அவர் மாதிரி எல்லா சாஸ்திரங்களுக்கும் புஸ்தகம் எழுதினவர் ஒருவரும் இல்லை. அத்தகைய பெரியவருக்குத் தம்முடைய பக்தியை சோதித்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டாகி விட்டது. பைத்தியம் பிடித்தால் அந்த சமயத்தில் கெட்ட வார்த்தைகள் சொல்லாமல், காம வார்த்தைகளைச் சொல்லாமல், ஈசுவர பக்தி பண்ணினால் அப்போது நம்முடைய பக்தி மெய்யானதுதான் என்று தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தார். ஊமத்தங்காய், ஊமத்தம்பூ இவற்றைச் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்துவிடும் என்று அவருக்குத் தெரியும்.

பைத்தியம் பிடிக்கிற மருந்தைச் சாப்பிட்டார். அவருக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. உடனே உளற ஆரம்பித்துவிட்டார். அவர் சொன்னவற்றை எல்லாம் சிஷ்யர்கள் எழுதிக் கொண்டார்கள். ஊமத்தம் பூவின் குணத்தை மாற்றக்கூடிய மருந்தைக் கொடுத்தார்கள். பைத்தியம் தெளிந்துவிட்டது. அவருக்கு பைத்தியம் பிடித்திருந்த காலத்தில் என்ன பிதற்றினார் என்று பார்த்தால் ஐம்பது சுலோகங்கள் ஈசுவரன் மேல் பாடியிருந்தார். அந்த கிரந்தத்துக்கு ஆத்மார்ப்பண ஸ்துதி அல்லது உன்மத்த பஞ்சாசத் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar