ராஜபாளையம்: ராஜபாளையம் முடங்கியாறு ரோடு சித்தி விநாயகர் கோயிலில் பங்குனி மாத ஐயப்பன் பூஜை நடந்தது. ஓம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தின் சார்பில் இரவு 8 மணியளவில் உற்ஸவர் ஐயப்ப சுவாமிக்கு அஷ்டாபிஷேகங்கள் நடந்தது. அதனைத் தொடர்ந்து திவ்ய நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. உற்ஸவர் அலங்கரிக்கப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு சர்வ அலங்காரத்தில் காட்சியளித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஓம் வில்லாளி வீரன் ஐயப்ப பக்த பஜனை சேவா சங்கத்தினர் செய்திருந்தனர்.