பதிவு செய்த நாள்
16
மார்
2020
04:03
தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். தீபம் ஏற்றும் போது ‘தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறினால் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
* சித்ர தீபம் – வீட்டில் வண்ணக் கோலமிட்டு அதன் மீது ஏற்றுவது
* மாலா தீபம் – அடுக்கடுக்காக தீபத் தட்டுகளில் ஏற்றுவது
* ஆகாச தீபம் – வீட்டின் வெளிப்புறத்தில் உயர்ந்த பகுதியில் ஏற்றுவது
* ஜல தீபம் – ஏற்றிய தீபத்தை தண்ணீரில் மிதக்க விடுவது
* படகு தீபம் – கங்கை நதியில் மாலையில் வாழை மட்டையின் மீது ஏற்றுவது
* சர்வ தீபம் – வீட்டின் அனைத்துப் பகுதிகளிலும் வரிசையாக ஏற்றுவது
* மோட்ச தீபம் – முன்னோர் நற்கதி அடைய கோயில் கோபுரத்தின் மீது ஏற்றுவது
* சர்வாலய தீபம் – கார்த்திகை மாதம் பவுர்ணமியன்று கோயில்களில் ஏற்றுவது
* அகண்ட தீபம் – மலை உச்சியில் பெரிய கொப்பரையில் ஏற்றுவது
* லட்ச தீபம் – லட்ச தீபங்களால் கோயிலை அலங்கரிப்பது
* மாவிளக்கு தீபம் – அரிசி மாவில் வெல்லம் கலந்து நெய் ஊற்றி ஏற்றுவது.