வடமதுரை மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மார் 2020 11:03
வடமதுரை : வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடந்த பிப்.29-ல் பூத்தமலர் பூச்சொரிதலுடன் துவங்கிய திருவிழாவில் நாள்தோறும் மண்டகப்படிதாரர் சார்பில் கலை நிகழ்ச்சிகளும், அலங்கார ரதத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி மங்கம்மாள்கேணி மைதானத்தில் நேற்றுமுன்தினம் இரவு 12:30 மணிக்கு துவங்கியது. காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பூக்குழியில் இறங்கினர். இன்று மாலை முளைப்பாரி எடுத்தல், மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.