சிங்கம்புணரி: சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தனி உடனுறை சுயம்பிரகதீஸ்வரர், சுயம்பிரகாச ஈஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி தினமான நேற்று வடுக பைரவர் பூஜை நடந்தது.காலை 10:00 மணிக்கு சன்னதி முன் யாக குண்டம் அமைக்கப்பட்டு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து பைரவருக்கு 21 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.