பதிவு செய்த நாள்
18
மார்
2020
10:03
ஊட்டி:ஊட்டி அருகே, சிறியூர் மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, சிறப்பாக கொண்டாடப்பட்டது.நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே அமைந்துள்ள சிறியூர் மாரியம்மன் திருவிழா, கடந்த, 9ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. 16ம் தேதி பூகுண்டத்துக்கு, பக்தர்கள் மரம் கொண்டு வரும் நிகழ்ச்சி, பிற்பகல், 3:00 மணிக்கு, ஸ்ரீ மாசி கரியபண்ட ஐய்யன் அழைப்பு நடந்தது. தொடர்ந்து, 6:00 மணி வரை அன்னதானம் வழங்கப்பட்டது.நள்ளிரவு 12:00 மணிக்கு, ஜாகரை தேர் (நவதானிய பூஜை), கூக்கல் திருவள்ளுவர் கலா மன்றத்தினரின், ஆரவல்லி சூரவல்லி என்னும் படுக மொழி நாடகம் நடந்தன. நேற்று காலை, 9:00 மணிக்கு நடந்த பூகுண்டம் நிகழ்ச்சியில், பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்தி கடன் செலுத்தினர்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.கோத்தகிரி - ஊட்டி - கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து, சிறியூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை, கூக்கல் கிராமத்தை சுற்றியுள்ள எட்டூர் மக்கள் செய்திருந்தனர்.