திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே தி.வைரவன்பட்டி திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஸ்ரீமூலபாலகால பைரவர் சன்னதியில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடந்த மகாபைரவர் யாகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் குணமடையவும், உலக நன்மை வேண்டியும் பிரார்த்திக்கப்பட்டது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் மூலவர் பைரவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து கணபதி பூஜை, தீபாராதனைகளுடன் மகா பைரவ யாகம் துவங்கியது. பின்னர் கோ பூஜை, கஜ பூஜை, மகா பைரவ ஹோமம் சிவாச்சாரியர்களால் வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. யாகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் குணமடையவும் பிரார்த்திக்கப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட புனித நீர் நிறைந்த கலசங்கள் புற்பபாடாகி பைரவருக்கு அபிஷேகம் நடந்து மகா தீபம் நடந்தது. சர்வ அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.