கொட்டாம்பட்டி : மணல் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர்கள் தற்போது மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிகின்றனர். நேற்று சொந்த ஊரில் நடைபெற்ற சித்தாண்டி கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள நுாற்றுக்கும் மேற்பட்டோர் கர்நாடகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினர்.நேற்று இரவு திருவிழா கொண்டாடும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் திருவிழாவை நிறுத்தினர்.இந்நிலையில் கொரோனா பரவும் நிலையில் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கிராமத்தில் தங்கியிருப்பதால் சுகாதாரத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.