கொரோனாவில் இருந்து தமிழ் புத்தாண்டு விடுவிக்கும்: மதுரை ஜோதிடர் ஆரூடம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2020 01:03
மதுரை, உலகை உலுக்கும் கொரோனாவில் இருந்து மக்களை தமிழ் புத்தாண்டு முழுமையாக விடுவிக்கும் என மதுரை திருவாப்புடையார் கோயில் ரிக்வேத கனபாடிகள் மகன் ஜோதிடர் ஐயப்பன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தனுசு ராசியில் 45 நாட்களாக குரு, செவ்வாய், சனி, கேது கிரகங்கள் சேர்ந்திருந்தனர். செவ்வாய், சனி சேரும் காலத்தில் போர், வெள்ளம், விபத்து ஏற்படும். தனுசு ராசியை மிதுனத்தில் இருந்து ராகு பார்ப்பதாலும், அங்குள்ள கேது சேர்க்கையாலும் கொரோனா தாக்குதல் ஏற்படுகிறது.மார்ச் 28 தனுசு ராசியில் இருக்கும் குரு மகர ராசிக்கு வருகிறார். ஏப்.14ல் சூரியன் மேஷத்திற்கு வருகிறார். இந்த கிரக மாற்றத்தால் வைரஸ் தாக்குதல் படிப்படியாக குறையும். சூரியன் உச்சம் பெறும் அக்னி நட்சத்திர காலத்தில் தாக்குதல் முழுமையாக நீங்கும். செப்.1ல் தனுசு ராசிக்கு கேது பெயர்ச்சியானதும் இயல்பு வாழ்க்கை ஏற்படும். இதிலிருந்து தப்ப திருச்செந்துார் முருகனை மனதார வழிபட்டால் நாடு நலம் பெறும். தேவாரப்பாடலில் உள்ள கோளறு பதிகத்தை படிப்பது நன்மையளிக்கும் என்றார்.