கீழக்கரை : கொரோனா வைரஸ் பரவுதலை தவிர்க்கும் விதமாக அரசின் ஊரடங்கு உத்தரவின் பேரில் ஏர்வாடி தர்காவின் வெளிப்புறம், உள்புற கதவுகள் மூடப்பட்டது.
ஏர்வாடி சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்காவில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து யாத்ரீகர்கள் வழிபாட்டிற்காக வருகின்றனர். மார்ச் 22 (ஞாயிறு) கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க மக்கள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்பட்டது. ஏர்வாடி தர்காவில் ஆன்மிக மன நல சிகிச்சைக்காகவும், வழிபாட்டிற்காகவும் யாத்ரீகர்கள், சுற்றுலாப்பயணிகள்தனியார் விடுதியில் தங்கியிருந்து தர்காவிற்கு வருவது வழக்கம். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியதை தொடர்ந்து ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை சார்பில் அனைத்து வாயில்களும் மூடப்பட்டது. ஏர்வாடி தர்கா நிர்வாகம், ஊராட்சி மூலம் தனியார் விடுதிகளில் தங்கியிருந்த வெளி மாநில, வெளி மாவட்ட நபர்களைசொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல அறிவுறுத்தப்பட்டது. யாத்ரீகர்கள் அனைவருக்கும் தர்கா நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.