பதிவு செய்த நாள்
25
மார்
2020
03:03
மேட்டூர்: அமாவாசை நாளில், பக்தர்கள் இல்லாமல், மேட்டூர் காவிரியாறு வெறிச்சோடியது. ஆண்டுதோறும் பங்குனி அமாவாசை, அதையொட்டி வரும் யுகாதி பண்டிகைக்கு, சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து, திரளான பக்தர்கள், மேட்டூர் வழியாக, மாதேஸ்வரன்மலை கோவிலுக்கு செல்வர். அதற்காக, மேட்டூரிலிருந்து, மாதேஸ்வரன் மலைக்கு, மூன்று நாள் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். அப்போது, மேட்டூர் காவிரியாற்றில் பக்தர்கள் புனித நீராடி விட்டு மலைக்கு செல்வர். ஆனால், கொரோனா பாதிப்பால், தமிழகம் - கர்நாடகா எல்லை மூடப்பட்டது. இதனால், மலைக்கு செல்வதை பக்தர்கள் ஒத்திவைத்ததால், அமாவாசையான நேற்று, மேட்டூர் காவிரியாறு வெறிச்சோடியது.