திருமாலின் வலக்கரத்தில் அமர்ந்துள்ள சக்கரத்தை சுதர்சனர் என்பர். சக்கரத்தாழ்வார் என்றும் இவரை அழைப்பர். சுதர்சனரை மூலவராக கொண்டு கும்பகோணத்தில் சக்கரபாணி கோயில் உள்ளது. தர்மத்தை காத்து, அதர்மத்தை ஒடுக்க இந்த ஆயுதத்தை திருமால் பயன்படுத்தியதால் இதை தர்ம சக்கரம் என்பர்.