பரமக்குடி முத்தாலம்மன் பங்குனி விழா நிறுத்தி வைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26மார் 2020 02:03
பரமக்குடி: பரமக்குடியில் ஆண்டு தோறும் முத்தாலம்மன் கோயில் பங்குனி விழா கொடியேற்றத்துடன் துவங்குது வழக்கம். இந்த ஆண்டு விழா மார்ச் 29ல் காப்புக்கட்டுடன் துவங்க இருந்தது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் அரசு முழு ஊரடங்கை அமுல் படுத்தியுள்ளது.இதனால் ஆயிர வைசிய சபை மற்றும் தேவஸ்தான டிரஸ்ட்டிகள் ஆலோசனை நடத்தி விழாவை நிறுத்தி வைக்கவும், மற்ற முடிவுகளை பின்னர் எடுப்பது என்றும் தீர்மானித்தனர். இதையடுத்து பல ஆண்டுகளாக நடந்து வந்த தேரோட்டம், பால்குட விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நிறுத்தப்பட்டது.இக்கோயிலுக்கு விரதம் இருந்து பால்குடம், அக்னிச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்த வேண்டியிருந்த பக்தர்கள் வரும் நாட்களில் நிலைமை சீரடைந்த பின் விழாவை எதிர் நோக்கியுள்ளனர்.