பதிவு செய்த நாள்
26
மார்
2020
03:03
திருவண்ணாமலை: கொரோனா பாதிப்பை தடுக்க, திருவண்ணாமலை, கிரிவலப்பாதையில் கூட்டம், கூட்டமாக அமர்ந்துள்ள சாதுக்களை, முகாம்களில் தங்க வைத்து, கண்காணிக்க, சமூக ஆர்வலர்கள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், 5,000க்கும் மேற்பட்ட சாதுக்கள் உள்ளனர். இவர்களுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து, கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர், பணம், துணி, மற்றும் உணவு பொருட்களை வழங்கி செல்கின்றனர். சாதுக்களுடன் அனைத்து பகுதி மக்களும், பல வெளிநாட்டினரும் நெருங்கிய சமூக தொடர்பில் உள்ளனர். தற்போது, கொரோனா பாதிப்பை தடுக்க, அரசு, 144 தடை உத்தரவை அமல் படுத்தியுள்ள நிலையில், அவர்கள் அரசின் இந்த உத்தரவை கடைப்பிடிக்காமல், கூட்டம் கூட்டமாக, கிரிவலப்பாதையில் அமர்ந்து, பொழுதை கழித்து வருகின்றனர். எனவே, அவர்களை முகாம்களில் தங்க வைத்து, தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.